விராட் கோலி, சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் கணக்கு தொடங்கி அதில் அவ்வப்போது ருசிகர தகவல்களையும், போட்டோக்களையும் பகிர்வது உண்டு. இன்ஸ்டாகிராமில் அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 5 கோடியை தொட்டுள்ளது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் கோலி தான். இந்த வகையில் 2-வது இடத்தில் இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா (பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 99 லட்சம் பேர்) உள்ளார்.
சானியா ஜோடி வெற்றி: துபாய் ஓபன் டென்னிஸ் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவின் முதலாவது சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, பிரான்சின் கரோலின் கார்சியா ஜோடி 6-4, 4-6, 10-8 என்ற செட் ணக்கில் குட்யாவ்ட்செவா (ரஷியா)- கேத்ரினா ஸ்ரீபோட்னிக் (சுலோவெனியா) இணையை சாய்த்தது. ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான சோபியா கெனின் (அமெரிக்கா) 7-6 (2), 3-6, 3-6 என்ற செட் கணக்கில் ரைபகினாவிடம் (கஜகஸ்தான்) அதிர்ச்சிகரமாக வீழ்ந்தார்.