பிற விளையாட்டு

பாராஒலிம்பிக் பேட்மிண்டன்: கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத் - பலாக் கோலி ஜோடி தோல்வி

பாராஒலிம்பிக் பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பலாக் கோலி, பிரமோத் பகத் ஜோடி வெண்கலப் பதக்கத்திற்கான ஆட்டத்தில் தோல்வி அடைந்தனர்.

தினத்தந்தி

டோக்கியோ,

டோக்கியோ பாராஒலிம்பிக் பாரா பேட்மிண்டன் போட்டியில் ஆடவர் எஸ்.எல் 4 பிரிவில் இந்தியாவின் சுகாஷ் யத்திராஜ் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். அதேபோல் ஆடவர் எஸ்.எச். 6 பிரிவுக்கான இறுதிப் போட்டியில் இந்திய வீரர் கிருஷ்ணா நாகர் வெற்றிப்பெற்று தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.

இதனிடையே நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி ஆகிய இருவரும் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்க போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற வெண்கலப்பதக்க போட்டியில் பிரமோத் பகத் மற்றும் பலாக் கோலி ஜோடி ஜப்பானின் பூஹிஹாரா மற்றும் சுகினோ இணையை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் ஜப்பான் ஜோடி 23-21, 21-19 என்ற கணக்கில் வென்றது. அத்துடன் வெண்கலப்பதக்கத்தையும் கைப்பற்றியது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு