பிற விளையாட்டு

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல்-மனிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சரத்கமல்-மனிகா ஜோடி ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றது.

தினத்தந்தி

தோகா,

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 8-ந் தேதி வரை நடக்கிறது. இதற்கான ஆசிய தகுதி சுற்று டேபிள் டென்னிஸ் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நடந்தது.

இதில் நேற்று நடந்த கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிஆட்டத்தில் இந்தியாவின் சரத் கமல்-மனிகா பத்ரா ஜோடி சரிவில் இருந்து அபாரமாக மீண்டு வந்து 8-11, 6-11, 11-5, 11-6, 13-11, 11-8 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சாங் சு லீ-ஜிஹீ ஜென் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இதன் மூலம் சரத் கமல்-மனிகா பத்ரா கூட்டணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றது. இருவரும் ஏற்கனவே ஒற்றையர் பிரிவிலும் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதிசெய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து