பிற விளையாட்டு

மாநில கூடைப்பந்து: தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி

மாநில கூடைப்பந்து போட்டியில், தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றிபெற்றது.

தினத்தந்தி

சென்னை,

மாநில கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் 18 அணிகளும், பெண்கள் பிரிவில் 14 அணிகளும் பங்கேற்றுள்ளன. 2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் பிரிவு ஆட்டங்களில் விளையாட்டு விடுதி (சென்னை) அணி 69-49 என்ற புள்ளி கணக்கில் தெம்பவானி (மதுரை) அணியையும், தமிழ்நாடு சிறப்பு போலீஸ் அணி 75-74 என்ற புள்ளி கணக்கில் எம்.எம்.பி.சி. (காஞ்சீபுரம்) அணியையும், வருமான வரி அணி 89-64 என்ற புள்ளி கணக்கில் திருவேணி (சேலம்) அணியையும் தோற்கடித்தன. பெண்கள் பிரிவில் நடந்த ஆட்டங்களில் இந்துஸ்தான் ஜாமெர்ஸ் அணி 56-25 என்ற புள்ளி கணக்கில் அல்வெர்னியா பள்ளியையும் (கோவை), அரைஸ் ஸ்டீல் அணி 57-16 என்ற புள்ளி கணக்கில் மெட்ராஸ் நேஷனல் அணியையும் வென்றன.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு