பிற விளையாட்டு

சையத் மோடி பேட்மிண்டன்: சவுரப் வர்மா, ரிதுபர்னா அரைஇறுதிக்கு முன்னேற்றம் - ஸ்ரீகாந்த் தோல்வி

சையத் மோடி பேட்மிண்டன் போட்டியில், சவுரப் வர்மா, ரிதுபர்னா அரைஇறுதிக்கு முன்னேறினர்.

தினத்தந்தி

லக்னோ,

சையத் மோடி சர்வதேச பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி லக்னோவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் சவுரப் வர்மா 21-19, 21-16 என்ற நேர்செட்டில் தாய்லாந்து வீரர் குன்லாவுத் விதிச்சர்னை வீழ்த்தி அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 18-21, 19-21 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரான சன் வான் ஹோவிடம் (கொரியா) தோல்வி கண்டு வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் தேசிய சாம்பியனான இந்தியாவின் ரிதுபர்னா தாஸ் 24-26, 21-10, 21-19 என்ற செட் கணக்கில் சக நாட்டு வீராங்கனை சுருதி முன்டாடாவை தோற்கடித்து அரைஇறுதியை எட்டினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்