பிற விளையாட்டு

டோக்கியோ ஒலிம்பிக்: தடகள போட்டியில் 7வது இடம் பிடித்த இந்திய வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 7வது இடம் பிடித்துள்ளார்.

டோக்கியோ,

32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த 23ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் 11வது நாளான இன்று நடந்த மகளிர் 200 மீட்டர் தடகள ஓட்ட பந்தய போட்டியில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் 7வது இடம் பிடித்துள்ளார். இதனால், அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பினை இழந்துள்ளார்.