பிற விளையாட்டு

தேசிய கொடியை கீழே விழாமல் லாவகமாக பிடித்த நீரஜ் சோப்ரா..!

பார்வையாளர் ஒருவர் வீசிய நம் நாட்டின் தேசியக்கொடியை தடகள வீரர் நீரஜ் சோப்ரா கீழே விழாமல் தடுத்து பிடித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

தினத்தந்தி

ஹாங்சோவ்,

சீனாவின் ஹாங்சுவில் 19வது ஆசிய விளையாட்டு நடக்கிறது. இதன் ஈட்டி எறிதல் போட்டியில், 4-வது வாய்ப்பில் அதிகபட்சமாக 88.88 மீ., துரம் எறிந்த நீரஜ், தங்கத்தை தட்டிச்சென்றார். இது ஆசிய விளையாட்டில் இவர் தொடர்ந்து வென்ற 2வது தங்கம் இதுவாகும்.

இந்நிலையில் தங்கம் வென்ற உற்சாகத்தில் மைதானத்தில் சுற்றி வந்து புகைப்படம் எடுக்க சென்று கொண்டிருந்த நீரஜ் சோப்ராவை நோக்கி பார்வையாளர் ஒருவர் நமது மூவர்ண தேசியகொடியை வீசினார். உடனே அதை கீழே விழாமல் தடுத்து லாவகமாக பிடித்தார் நீரஜ் சோப்ரா. இது தொடர்பான வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து