image credit: ANI.com 
பிற விளையாட்டு

பெண்கள் தேசிய குத்துச்சண்டை போட்டி: லோவ்லினா, நிகாத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.

தினத்தந்தி

போபால்,

6வது எலைட் மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்று வருகிறது. இதில் அசாமை சேர்ந்த லோவ்லினா, 75 கிலோ கால் இறுதிப் போட்டியில் ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தின் மீனா ராணியை எதிர்த்துப் போட்டியிட்டார்.

தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய லோவ்லினா, 5-0 என்ற புள்ளிகள் கணக்கில் மீனா ராணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

அதேபோல, 50 கிலோ எடைப்பிரிவுக்கான காலிறுதிப் போட்டியில் கோவாவின் தனிக்ஷா சாவரை நிகாத் எதிர்கொண்டார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவந்த நிகாத், தனிஷாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அரையிறுதி போட்டிகள் இன்றுமுதல் தொடங்கி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.  

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்