பிற விளையாட்டு

பெண்கள் உலக குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்

பெண்கள் உலக குத்துச்சண்டை போட்டியில், இந்திய வீராங்கனைகள் கால்இறுதிக்கு முன்னேறினர்.

தினத்தந்தி

உலன் உடே,

11-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 54 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை ஜமுனா போரோ 5-0 என்ற கணக்கில் அல்ஜீரியா வீராங்கனை ஒவ்டாட் ஸ்போவை தோற்கடித்து கால்இறுதிக்குள் நுழைந்தார். கால்இறுதியில் ஜமுனா போரோ, பெலாரஸ் வீராங்கனை யுலியா அபனாசோவிச்சை சந்திக்கிறார்.

69 கிலோ உடல் எடைப்பிரிவின் கால்இறுதிக்கு முந்தைய சுற்றில், கடந்த உலக போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன், மொராக்கோ வீராங்கனை ஒமய்மா பெல் அபிப்பை எதிர்கொண்டார். இதில் எதிராளிக்கு ஆக்ரோஷமாக குத்துவிட்ட லவ்லினா போர்கோஹெய்ன் 5-0 என்ற கணக்கில் ஒமய்மா பெல் அபிப்பை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறினார். இன்று நடைபெறும் கால்இறுதியில் லவ்லினா போர்கோஹெய்ன், போலந்து வீராங்கனை கரோலினா கோஸ்ஜிஸ்காவுடன் மோதுகிறார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு