பிற விளையாட்டு

உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பி.வி.சிந்து அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்

பி.வி.சிந்து அடுத்து மலேசியாவின் லெட்ஷனாவை எதிர்கொள்கிறார்.

தினத்தந்தி

பாரீஸ்,

29-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசையில் 15-வது இடம் வகிப்பவருமான இந்தியாவின் பி.வி.சிந்து, 69-ம் நிலை வீராங்கனை கலோயனா நல்பந்தோவாவை (பல்கேரியா) சந்தித்தார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய பிவி சிந்து 23-21, 21-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றார். பி.வி.சிந்து அடுத்து மலேசியாவின் லெட்ஷனாவை எதிர்கொள்கிறார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் எச்.எஸ். பிரனாய் 21-18, 21-15 என்ற நேர் செட்டில் ஜோவாகிம் ஓல்டோர்ப்பை (பின்லாந்து) வீழ்த்தி 2-வது சுற்றை எட்டினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து