Image Courtesy: PTI  
பிற விளையாட்டு

உலக பாரா தடகளம்: டெல்லி நேரு ஸ்டேடியத்தில் வெளிநாட்டு பயிற்சியாளர்களை கடித்து குதறிய நாய்

உலக பாரா தடகள போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

உலக பாரா தடகள போட்டி டெல்லி நேரு ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் 104 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். அங்கு கென்யா நாட்டு பயிற்சியாளர் டென்னிஸ் மராகியா வீரருடன் பேசிக் கொண்டிருந்த போது அவரை தெருநாய் ஒன்று கடித்து குதறியது.

இதில் காலில் காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றதுடன், தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்கிறார். இதே போல் ஜப்பான் பயிற்சியாளர் மெய்கோ ஒகுமட்சூவை அணியினரின் பயிற்சியை மேற்பார்வையிட்டு கொண்டிருந்த போது நாய் கடித்துள்ளது.

இதையடுத்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் பாதுகாப்புக்காக மைதான வளாகத்தில் நாய்களை பிடிக்க இரண்டு நாய்பிடி குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்