பிற விளையாட்டு

கொரோனா பாதிப்பு: போல் வால்ட் உலக சாம்பியன் ஒலிம்பிக் போட்டியில் இருந்து வெளியேற்றம்

போல் வால்ட் பிரிவில் இரண்டு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற சாம் கென்ட்ரிக்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார்

தினத்தந்தி

சென்னை

இரண்டு முறை உலக போல் வால்ட் சாம்பியன் சாம் கென்ட்ரிக்ஸ் கொரோனா பாதிப்பு காரணமாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று அமெரிக்காவின் ஒலிம்பிக் மற்றும் பாரா ஒலிம்பிக் கமிட்டி உறுதிப்படுத்தியது.

இது குறித்து அமெரிக்கா ஒலிம்பிக் கமிட்டி கூறியதாவது;-

சாம் கென்ட்ரிக்ஸ் கொரோனா பாதிப்பு உறுதியானது குறித்து நாங்கள் வருத்தப்படுகிறோம். டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் போட்டியிட மாட்டார்.2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற கென்ட்ரிக்ஸ் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார் என கூறி உள்ளது.

2017 மற்றும் 2019 உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் கென்ட்ரிக்ஸ் தங்கப் பதக்கங்களை வென்றதுடன், டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டியில் முக்கிய போட்டியாளர்களில் ஒருவராக இருந்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு