Image Courtesy: @NBOtoronto 
டென்னிஸ்

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ்; ஜெசிகா பெகுலா அரையிறுதிக்கு முன்னேற்றம்

இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோத உள்ளார்.

தினத்தந்தி

சின்சினாட்டி,

சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் முன்னணி வீராங்கனையான அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கனடாவின் லேலா பெர்னாண்டஸ் உடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெசிகா பெகுலா 7-5, 6-7 (1-7), 7-6 (7-3) என்ற செட் கணக்கில் கனடாவின் லேலா பெர்னாண்டஸை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் ஜெசிகா பெகுலா, ஸ்பெயினின் பாலா படோசா உடன் மோத உள்ளார். இன்று நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் போலந்தின் இகா ஸ்வியாடெக் - பெலாரசின் அரினா சபலென்கா ஆகியோர் மோத உள்ளனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்