டென்னிஸ்

பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்றில் அங்கிதா, ராம்குமார் தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிக்கான தகுதி சுற்று பாரீஸ் நகரில் நடந்து வருகிறது.

தினத்தந்தி

இதன் பெண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 182-வது இடம் வகிக்கும் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, 125-ம் நிலை வீராங்கனையான கிரீத் மினெனை (பெல்ஜியம்) எதிர்கொண்டார். இதில் கிரீத்தின் அதிரடிக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய அங்கிதா 2-6, 0-6 என்ற நேர் செட்டில் தோற்று வெளியேறினார். இதே போல் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்றில்

தமிழகத்தை சேர்ந்த ராம்குமார் 1-6, 2-6 என்ற நேர் செட்டில் டெனிஸ் இஸ்தோமினிடம் (உஸ்பெகிஸ்தான்) வீழ்ந்து ஏமாற்றம் அளித்தார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்