டென்னிஸ்

கொரோனா அச்சுறுத்தலால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தள்ளிவைப்பு

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் அடுத்த மாதம் (மே) 23-ந் தேதி தொடங்குவதாக இருந்தது.

தினத்தந்தி

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த போட்டி ஒரு வாரம் தள்ளிவைக்கப்பட்டு மே 30-ந் தேதி தொடங்கும் என்று பிரான்ஸ் டென்னிஸ் சம்மேளனம் நேற்று அறிவித்தது. பாதுகாப்பான சூழ்நிலையில் முடிந்த அளவுக்கு அதிக பார்வையாளர்கள் முன்னிலையில் போட்டி நடைபெறுவதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி செப்டம்பர் மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டதுடன், தினசரி 1,000 ரசிகர்கள் மட்டுமே போட்டியை காண அனுமதி அளிக்கப்பட்டது நினைவுகூரக்தக்கது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது