டென்னிஸ்

சர்வதேச டென்னிஸ் போட்டி: சானியா ஜோடி அரைஇறுதிக்கு தகுதி

சர்வதேச டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா நாடியா கிச்னோக் ஜோடி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

அடிலெய்டு,

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிக்கு முன்னோட்டமாக சர்வதேச டென்னிஸ் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் இரட்டையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரைனின் நாடியா கிச்னோக் கூட்டணி அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்ஸ் -இங்கிலாந்தின் ஹீதர் வாட்சன் இணையுடன் மோதியது.

இந்த ஆட்டத்தில் சானியா மிர்சா - நாடியா கிச்னோக் கூட்டணி 6-0, 1-6, 10-5 என்ற செட் கணக்கில் ஷெல்பி ரோஜர்ஸ் - ஹீதர் வாட்சன் இணையை தோற்கடித்து அரைஇறுதிக்கு முன்னேறியது. சானியா மிர்சா ஜோடி அடுத்து ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்ட்டி-ஸ்டோர்ம் சான்டெர்ஸ் இணையை எதிர்கொள்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்