டென்னிஸ்

இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர்: அரைஇறுதிக்கு ரைபகினா, ஆஸ்டாபென்கோ தகுதி

காயம் காரணமாக போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் போட்டியில் இருந்து விலகினார்.

தினத்தந்தி

ரோம்,

இத்தாலியன் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் நடப்பு சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான இகா ஸ்வியாடெக் (போலந்து), 6-ம் நிலை வீராங்கனையான எலினா ரைபகினாவை (கஜகஸ்தான்) எதிர்கொண்டார்.

இதில் ஸ்வியாடெக் 6-2, 6-7 (3-7), 2-2 என்ற கணக்கில் இருந்த போது காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் ரைபகினா அரைஇறுதிக்கு முன்னேறினார். மற்றொரு கால்இறுதியில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் லாத்வியா வீராங்கனை ஜெலினா ஆஸ்டாபென்கோ 6-2, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பாலா படோசாவை வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை