டென்னிஸ்

மராட்டிய ஓபன் டென்னிஸ்: குரோஷிய வீரர் மரின் சிலிச் விலகல்

மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில், குரோஷிய வீரர் மரின் சிலிச் விலகினார்.

புனே,

மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி வருகிற 31-ந்தேதி முதல் ஜனவரி 5-ந்தேதி வரை புனேயில் நடக்கிறது. தென்ஆப்பிரிக்காவின் கெவின் ஆண்டர்சன், நடப்பு சாம்பியனான பிரான்சின் ஜிலெஸ் சிமோன், கொரியாவின் ஹியோன் சங், இந்தியாவின் ராம்குமார் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்கிறார்கள். இதற்கான தகுதிசுற்று போட்டி இன்று தொடங்குகிறது.

இந்த போட்டியில் கலந்து கொள்வதை உறுதி செய்திருந்த உலக தரவரிசையில் 7-வது இடம் வகிக்கும் குரோஷியாவின் மரின் சிலிச் திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். கால்முட்டி காயத்தால் அவதிப்படுவதாகவும், மராட்டிய ஓபனில் ஆட முடியாமல் போவதற்காக ரசிகர்களிடம், போட்டி அமைப்பாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் தான் புத்தாண்டை கொண்டாடி வந்தேன். இந்த முறை அதை தவற விடுவதாகவும் சிலிச் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு பதிலாக போர்ச்சுகல் வீரர் பெட்ரோ சோசா பிரதான சுற்றில் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு