image courtesy; AFP 
டென்னிஸ்

மீண்டும் டென்னிஸ் களத்திற்கு திரும்பும் நவோமி ஒசாகா!

அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சிட்னி,

'கிராண்ட்ஸ்லாம்'அந்தஸ்து பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரானது அடுத்தாண்டு ஜனவரி மாதம் 14ஆம் தேதி தொடங்கி 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2 முறை சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா பங்கேற்க உள்ளார்.

குழந்தை பிறப்பை முன்னிட்டு இந்த ஆண்டில் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஒதுங்கி இருந்த ஒசாகா ஆஸ்திரேலிய ஓபனில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். அதற்கு பயிற்சி மேற்கொள்ளும் விதமாக டிசம்பர் 31 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ள பிரிஸ்பேன் இண்டர்நேஷனல் டென்னிஸ் தொடரில் விளையாட உள்ளார்.

இது குறித்து ஒசாகா கூறுகையில்,

"நான் மீண்டும் போட்டியிடுவதில் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். எனது சீசனை பிரிஸ்பேனில் தொடங்குவதை நான் எப்போதும் விரும்புகிறேன். மீண்டும் களத்திற்கு திரும்பி வர காத்திருக்க முடியவில்லை "என்று தெரிவித்துள்ளார். 

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து