விளையாட்டு

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில் திறப்பு - கண்காட்சி போட்டி நடத்த திட்டம்

ஆமதாபாத்தில் கட்டப்படும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் மார்ச் மாதத்தில் திறக்கப்பட உள்ளது.

தினத்தந்தி

ஆமதாபாத்,

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் ரூ.700 கோடி செலவில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு லட்சத்து 10 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட இது, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தை விட பெரியதாகும். மொத்தம் 11 ஆடுகளங்கள் அமைக்கப்படுகிறது. மழை பெய்தால் 30 நிமிடத்திற்குள் தண்ணீர் வெளியேறும் வகையில் நவீன வடிகால் வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்த மைதானம் தயாராகி விடும் என்று குஜராத் கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

சர்தார் பட்டேல் பெயரிலான இந்த புதிய ஸ்டேடியத்தில் மார்ச் மாதம் ஆசிய லெவன்-உலக லெவன் அணிகள் இடையே கண்காட்சி கிரிக்கெட் போட்டியை நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்