மாவட்ட செய்திகள்

நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம்: முருகன் கோவில்களில் தைப்பூச திருவிழா

மும்பையில் உள்ள முருகன் கோவில்களில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மும்பை,

தமிழ்க்கடவுள் முருகப்பெருமானுக்கு நடக்கும் திருவிழாக்களில் ஒன்றான தைப்பூச திருவிழா நேற்று மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி மும்பையில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில்களில் அதிகாலை முதலே கணபதி ஹோமம் நடந்தது.

முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. பக்தர்கள் அலகு குத்தியும், பால்குடம், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.