ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்த ஓம் பிரகாஷ் மீனா சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய போலீஸ் சூப்பிரண்டாக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு பாதுகாப்பாகவும் அறணாகவும் இருப்பேன். பொதுமக்கள் தேவைகளை உடனுக்குடன் பூர்த்தி செய்வேன். சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.