முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர் அருகே உள்ள விளங்குளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருண் முனீஸ்வரன் (வயது26). இவர் தனியார் நிலையத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற கவலையும் தீராத வயிற்றுவலி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தநிலயில் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் முதுகுளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.