ஓசூர்:
ஓசூர் தாலுகா பூதிநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி கவிதா (வயது 40). இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் மனமுடைந்த கவிதா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.