பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தைச் சேர்ந்த பிச்சைமகன் செல்வம்(வயது 21). இவர் நேற்று வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து, செல்வம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.