பண்ருட்டி,
பண்ருட்டியை அடுத்த மாளிகம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் பாலசுப்பிரமணியன் (வயது 27). இவர் வீட்டின் பின்னால் உள்ள முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலசுப்பிரமணியனின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.