புதுச்சேரி

புதுச்சேரி கதிர்வேல் சாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா - முதல்-மந்திரி ரங்கசாமி பங்கேற்று சாமி தரிசனம்

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்வில் இன்று ஆட்டுக்கிடா வாகனத்தில் கதிர்வேல் சாமி எழுந்தருளினார்.

தினத்தந்தி

புதுச்சேரி,

புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் அமைந்துள்ள கதிர்வேல் சாமி ஆலயத்தில் சூரசம்ஹார விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சூரசம்ஹார உற்சவ விழா கடந்த 20-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார நிகழ்வில் இன்று ஆட்டுக்கிடா வாகனத்தில் கதிர்வேல் சாமி எழுந்தருளினார்.

இந்த சூரசம்ஹார விழாவில் புதுச்சேரி முதல்-மந்திரி ரங்கசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் புதுச்சேரி மற்றும் அதன் சுட்டுவட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் வருகை தந்து கதிர்வேல் சாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை