சோமரசம்பேட்டை
திருச்சி மாவட்டம், இனாம்குளத்தூர் அருகே உள்ள பெரிய ஆலம்பட்டியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது 27). இவர் பொன்மலை ரயில்வேயில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி இந்திராணி (26). இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. நேற்று கணவன்-மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில், மனமுடைந்த இந்திராணி இனாம்குளத்தூர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை ரயில்வே போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
.