குடியாத்தம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் பின்புறம் வசிக்கும் ராஜேஷ் என்பவரது வீட்டின் அருகே நேற்று மாலை புஸ் புஸ் என சத்தம் வந்துள்ளது. அருகில் சென்று பார்த்த போது பெரிய நாகப்பாம்பு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 6 அடி நீளமுள்ள பெரிய நாகபாம்பை பிடித்து, குடியாத்தம் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.