மாவட்ட செய்திகள்

கடலில் மீன்பிடித்தபோது மீனவர் வலையில் சிக்கிய ஐம்பொன் சிலை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைப்பு

கானத்தூர் கரிகாட்டுக்குப்பம் பகுதியில் மீனவர்கள் மீன்பிடித்தபோது வலையில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஐம்பொன் சிலை சிக்கியது. இந்த சிலை வருவாய்த்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திருப்போரூர்,

சென்னை புறநகர் பகுதியான கிழக்கு கடற்கரை சாலை கானத்தூர் அருகே கரிகாட்டுக்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த மீனவர் சிவலிங்கம் என்பவர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு நள்ளிரவு 3 பேருடன் மீன்பிடிக்க படகில் கடலுக்கு சென்றனர். வடநெம்மேலி முதலை பண்ணை அருகே கடலுக்குள் மீன்பிடிக்க வலைவிரித்தனர். அப்போது மீனுடன் ஒரு சிலை சிக்கியது.

உடனே மீனவர்கள் அந்த சிலையை கரைக்கு கொண்டு வந்து பார்த்தபோது, கிருஷ்ணர் சிலை என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த சிலையை தாழம்பூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.