புதுச்சேரி

மீனவரை தாக்கி கொலை மிரட்டல்

காலாப்பட்டு அருகே முன்விரோத தகராறில் மீனவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தினத்தந்தி

காலாப்பட்டு

பெரிய காலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 34), மீனவர். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சரண்ராஜ், அவரது நண்பர்கள் சரவணன், மகா, காந்தி 4 பேருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் வேலு கடற்கரையில் நடந்து சென்றார். அவரை முன்விரோதம் காரணமாக சரண்ராஜ் உள்பட 4 பேரும் சேர்ந்து திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த வேலு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று, காலாப்பட்டு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்மணி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, சரண்ராஜ் உள்பட 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்