மாவட்ட செய்திகள்

வீட்டு வேலைக்கு அழைத்து சென்று சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு

உத்திரமேரூர் அருகே வீட்டு வேலை பார்க்க அழைத்து சென்று, சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அவரது கள்ளக்காதலனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

உத்திரமேரூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அருந்ததியர் பாளையம் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதியின் 16 வயது மகளை, அதே பகுதியை சேர்ந்த வேளாங்கண்ணி (வயது 45), அவரது கள்ளக்காதலன் அற்புதராஜ் ஆகியோர் வீட்டுவேலைக்காக அழைத்து சென்றனர். பின்னர் சிறுமிக்கு மயக்கமருந்து கொடுத்து விபசாரத்தில் ஈடுபடுத்தினர்.