தளவாய்புரம்,
சேத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையில் போலீசார் மாலையம்மன் கோவில் மலை அடிவாரப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது முத்துசாமிபுரம் வெங்கடேசன் (வயது 38) என்பவர் தனது டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து மணல் அள்ளிய டிராக்டரை பறிமுதல் செய்தனர்.