வாய்மேடு:
தலைஞாயிறு ஒன்றியம் உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆனி கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம், நெய், திருநீறு, திரவியம், மஞ்சள் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.