திருப்பத்தூர்,
திருப்பத்தூர் அருகே உள்ள கீழச்சிவல்பட்டியில் தனியார் கல்லூரி விடுதியில் தங்கி 28 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இங்கு நேற்று முன்தினம் இரவு தக்காளி சாதம் சாப் பிட்ட 9 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு உணவு ஒவ்வாமை காரணமாக வாந்தி- மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கீழச்சிவல்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.