மாவட்ட செய்திகள்

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நடக்குமா?

குடகில் வரலாறு காணாத மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதால் உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா நடைபெறுமா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.

மைசூரு,

நாளை (வியாழக்கிழமை) நடைபெற இருந்த யானைகளின் கஜபயணமும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியையொட்டி கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டும், மைசூரு தசரா விழா வருகிற அக்டோபர் மாதம் 10-ந்தேதி தொடங்கி 19-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அக்டோபர் மாதம் 19-ந்தேதி விஜயதசமி அன்று ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.