திருவெறும்பூர்,அக்.31-
திருவெறும்பூர் அருகே உள்ள உரத்தூரை சேர்ந்தவர் கர்ணன். இவரது மனைவி ராஜலட்சுமி (வயது 30). சம்பவத்தன்று இவர் திருவெறும்பூர் கடைவீதியில் காய்கறி வாங்கிக் கொண்டு திருச்சி-தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது, துவாக்குடியில் இருந்து திருச்சி நோக்கி பெட்ரோல் ஏற்றிவந்த லாரி மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் திருவெறும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.