மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் குடிநீர் வழங்காததால் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

பெரம்பலூரில் குடிநீர் வழங்காததால் காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் பல இடங்களில் ஒரு வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரசு தலைமை மருத்துவமனை அருகே உள்ள எம்.ஜி.ஆர். நகரில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், கடந்த இரு வாரத்திற்கு மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து நகராட்சி அலுவலர்களிடம், அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்துள்ளனர்.