புதுச்சேரி

சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

புதுச்சேரி

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 12 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி கடிதம் எழுதியுள்ளார்.

மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர் ரங்கசாமி எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது:-

12 மீனவர்கள்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் கீழகாசாக்குடிமேட்டை சேர்ந்தவர் வைத்தியநாதன். அவருக்கு சொந்தமான படகில் கடந்த 3-ந் தேதி 12 மீனவர்கள் ஆழ்கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

அந்த படகில், கீழகாசாக்குடியை சேர்ந்த இளையராஜா (வயது 33), கணேசன் (48), பிரேம்குமார் (25), ராமன் (31), தர்மசாமி (48), தமிழ்நாட்டில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த வீரா (28), தினேஷ் (28), ராமநாதன் (37), ஜெகதீஷ்வரன் (27), விக்னேஷ் (22), சதீஷ்குமார் (23), பாக்கியராஜ் (23) ஆகியோர் மீன்பிடிக்க சென்றனர்.

மீட்க வேண்டும்

இந்த நிலையில் வைத்தியநாதன் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையால் நேற்று சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் காரைக்கால் மீனவரின் படகையும் பறிமுதல் செய்திருக்கிறார்கள்.

இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 12 மீனவர்களையும், அவர்களுடைய மீன்பிடி படகினையும் விடுவிப்பதற்கு உரிய தூதரக வழிமுறைகள் மூலமாக விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரூபாய் மதிப்பை மீட்டெடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: ப.சிதம்பரம் விமர்சனம்

மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான வரி குறைப்பு இல்லை: நகை பிரியர்களுக்கு ஏமாற்றம்

நிர்மலா சீதாராமன் 9 முறை பட்ஜெட் வாசித்த நேர விவரம்

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு?

மத்திய பட்ஜெட்: மாற்றம் இல்லாத ஏமாற்றம் - கனிமொழி எம்.பி. விமர்சனம்