சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள போகிபுரத்தை சேர்ந்தவர் துரைசாமி (வயது 55). கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வேம்பள்ளி அணை பகுதிக்கு சென்ற போது, தவறி அணையில் விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.