பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் 5 பனை பகுதியை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 61). கூலித்தொழிலாளி. இவருக்கு மாதேஸ்வரன் என்ற மகன் உள்ளார். இந்த நிலையில் குப்புசாமி நேற்று தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மாதேஸ்வரன் பள்ளிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குப்புசாமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.