மாவட்ட செய்திகள்

ஓசூர் அருகே தொழிலாளி தற்கொலை

ஓசூர் அருகே தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

ஓசூர்:

ஓசூர் தேர்பேட்டை தெப்பகுளம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ஹரி (வயது 18). கூலித்தொழிலாளி. கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு ஹரிக்கு விபத்து ஏற்பட்டது. அன்று முதல் தலை வலியால் அவதிப்பட்டு வந்த அவர், வாழ்க்கையில் வெறுப்படைந்து ஓசூர் கே.கே.நகர் பகுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

----