மும்பை

போலி இணையதளம் உருவாக்கி பணமோசடி செய்த வாலிபர் கைது

போலி இணையதளம் உருவாக்கி பணமோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மும்பை, 

மும்பை பி.கே.சி பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் தனது குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க அலிபாக்கில் உள்ள பங்களா வீட்டை வாடகைக்கு முன்பதிவு செய்ய ஆன்லைனில் தேடி வந்தார். அதில் இருந்த ஒரு இணையதளம் லிங்க்கை தொடர்பு கொண்டார். அலிபாக்கில் பங்களா வீட்டை முன்பதிவு செய்ய ரூ.90 ஆயிரம் செலுத்துமாறு பெண் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி பணத்தை செலுத்திய பிறகு அந்த நம்பரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட அவர் போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்படி போலீசார் நடத்திய விசாரணையில், போலி இணையதளம் மூலம் பங்களா வீடு வாடகைக்கு விடுவதாக கூறி பலரிடம் மோசடி நடந்து இருப்பது தெரியவந்தது. இந்த மோசடியில் ஈடுபட்டவர் ஆகாஷ் வாத்வானி (வயது23) எனவும், இவர் மீது ஏற்கனவே 20 வழக்குகள் பல்வேறு போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருப்பதும் தெரியவந்தது. போலீசாரிடம் பிடிபடாமல் இருக்க அவர் அடிக்கடி இருப்பிடத்தை மாற்றி வந்தார். இறுதியாக ஜூகுவில் உள்ள ஓட்டலில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு