புதுச்சேரி

அரவிந்தர் ஆசிரம அச்சகத்தில் திருடிய வாலிபர் கைது

கடற்கரை சாலையில் உள்ள அரவிந்தர் ஆசிரம அச்சகத்தில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரை சாலையில் அரவிந்தர் ஆசிரமத்திற்கு சொந்தமான அச்சகம் உள்ளது. இந்த அச்சகத்தின் ஒரு பகுதியில் உள்ள அறையில் ஆசிரமவாசிகள் தங்கியுள்ளனர். இதில் பெண்கள் தங்கியிருந்த அறையில் இருந்து ரூ.3 ஆயிரம் திருடு போனது. இதுகுறித்து ஆசிரம அச்சக மேலாளர் சுவாதின் சட்டர்ஜி பெரியகடை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பணத்தை திருடியது ரங்கப்பிள்ளை வீதியில் பிளாட்பாரத்தில் வசிக்கும் விஜய் (வயது 24) என்பது தெரியவந்தது. மது குடிப்பதற்காக பணத்தை திருடியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்