மாவட்ட செய்திகள்

வாலிபர் தற்கொலை

பெரியகுளம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரியகுளம்:

பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த சீனிவாசகம் மகன் கோகுல்ராஜ் (வயது 25). செல்போன் கடை நடத்தி வந்தார். இவர் குடும்ப பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சீனிவாசகம் கொடுத்த புகாரின் பேரில் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.