தொடர்ந்து ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் அருண் விஜய் படக்குழு.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..

இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பார்டர்’. இப்படம் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
தொடர்ந்து ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கும் அருண் விஜய் படக்குழு.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..
Published on

இயக்குனர் அறிவழகன் மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'பார்டர்'. இப்படத்தில் நடிகைகள் ரெஜினா கசன்ட்ரா, ஸ்டெபி பட்டேல் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விஜய ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய படத்தொகுப்பு பணிகளை சாபு ஜோசப் மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் கடந்த வருடம் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வந்த சமயத்தில் சில காரணங்களால் படம் வெளியாகாமல் தள்ளிப் போனது. இதையடுத்து இப்படம் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு வெளியாகவில்லை. இதையடுத்து இப்படம் வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை மீண்டும் படக்குழு தள்ளி வைத்துள்ளது. இது குறித்து 'பார்டர்' படக்குழு வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், " அருண் விஜய்யின் 'பார்டர்' திரைப்படம் பிப்ரவரி 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்த நிலையில் தற்போதைய நிச்சயமற்ற சூழ்நிலைகளால் வெளியிட முடியவில்லை. இந்த திரைப்படம் உங்கள் பொறுமைக்கு தகுதியானதாக இருக்கும் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்று பதிவிட்டுள்ளனர்.

மேலும், இப்படம் வருகிற மார்ச் மாதம் வெளியாகும் எனவும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com