கார் மோதி பொக்லைன் டிரைவர் காயம்

திரு-பட்டினம் அருகே கார் மோதியதில் பொக்லைன் டிரைவர் காயம் அடைந்தார்.
கார் மோதி பொக்லைன் டிரைவர் காயம்
Published on

திரு-பட்டினம்

திரு-பட்டினத்தில் தனியார் ரசாயன ஆலையில் பொக்லைன் ஆபரேட்டராக வேலை பார்ப்பவர் பிரபாகரன் (வயது 26). இவர் சொந்த வேலையாக காரைக்காலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார்.திருமலைராயன் ஆற்றுப் பாலத்தைக் கடந்து பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் மோதி காயம் அடைந்தார்.

விபத்து குறித்து காரைக்கால் தெற்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து காரை ஒட்டி விபத்தை ஏற்படுத்திய செல்வம் (62) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com