இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளது. கேப் டவுன் நகரத்தில் இருந்து 2,500 கி.மீ தொலைவில் கடலின் ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் காலை 10.25 மணி அளவில் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.