சூடானில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் தாக்குதல் என தகவல்



போர் நிறுத்தத்தை மீறி சூடானில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் உம்துர்மன் பகுதியில் துணை ராணுவப்படை தாக்குதல் என தகவல்கள் தெரிவிக்கின்றன. போர் நிறுத்தம் இன்று மாலை 6 மணி வரை அமலில் உள்ள நிலையில் உம்துர்மன் பகுதியில் தாக்குதல் நடத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போதுமான பாதுகாப்பு இல்லை, அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை என்றும் உம்துர்மன் பகுதியில் வசிக்கும் இந்தியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire