தொடர்ந்து 4வது நாளாக மாற்றமின்றி விற்பனையாகும் தங்கம்...மக்கள் மகிழ்ச்சி

மத்திய பட்ஜெட் அறிவிப்பில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் உச்சத்தில் காணப்பட்ட தங்கம் விலை, சரிவை சந்தித்து வருகிறது.
File image
File image
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்கு தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில், 2024-25ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி அறிவித்தார். பட்ஜெட் எதிரொலியாக கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வந்தது. இதையடுத்து கடந்த 24ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,560-க்கு விற்று வந்த நிலையில், தொடர்ந்து 4 நாட்களாக தங்கம் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. இதனால், நகை பிரியர்கள் மற்றும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மாற்றம் இன்றி ஒரு சவரன் ரூ.53,560-க்கும், ஒரு கிராம் ரூ.6,695-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் உயர்ந்து ரூ.93.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com